Wednesday, August 28, 2013

நீங்க செய்யுற நன்றிக்கடன் இதுதானா?

என்னங்க அநியாயம் இது?
வெளிநாட்டுல அதுவும் அரபு நாட்டுல இருந்து வர்றவன்லாம் பெட்ரோல் கம்பெனி ஓனர்னு நினைச்சுகிட்டானுவ....

வாயையும் வயித்தையும் கட்டி... தீயா... நெருப்பாய் கொதிக்கும் வெயில்ல நின்னு வேலை செய்து.... ரத்தத்தை வேர்வையாய் சிந்தி, வெந்து போற அளவிற்கு சூடாகி போன வெண்ணீர்ல குளிச்சு, குப்புஸ் தின்னு கொட்டத்துல அடைக்கப்பட்ட மிருகங்களைப் போல் படுத்து, கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த பணத்துல, தான் கஷ்டப்பட்டாலும் தன் குடும்பத்தார் சந்தோசமா இருக்கட்டும்னு ஒரு டிவி வாங்கிட்டு வந்தா...

அதுக்கு இனி கட்டணுமாம் சுங்க வரி....

நல்லா இருக்குது.... வெளிநாட்டுல உழைச்சு அனுப்புற கோடிக்கணக்கான பணத்தின் மூலம் அரசுக்கு கிடைக்குற அந்நியச் செலாவணிக்கு.... நீங்க செய்யுற நன்றிக்கடன் இதானா?
 
என்ன கொடும சரவணன் இது.......!

No comments:

Post a Comment