Monday, November 30, 2015

Freechage promo code

Get Rs.50 FreeCharge Wallet Cashback instantly on your first mobile recharge of Rs.50 . Use promocode : RKM55RJ.
Redeem Code valid once per new user per Credit/Debit Card only.

Read more »

Monday, August 31, 2015

ஸ்மார்ட் போன்களில் எது போலி? எது அசல்? என்பதை கண்டுபிடிப்ப‍து எப்ப‍டி? – விழிப்புணர்வு பதிவு!!!

இளைஞர்களின் கையில் இந்தியா என்கிற வாசகம் மறந்து, அனைவரின் கையில் ஸ்மார்ட்போன் என்கிற

வாசகமே இன்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. புதிது புதிதாய் ஸ்மார்ட்போன்கள் அப்டேட் வெர்ஸன்களுடன் தினம்தினம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அனைத்து விதமான ஃப்யூச்சர்களையும் பார்த்து ஸ்மார்ட்போன் வாங்குபவர்களைவிட, அதன் செயல்பாடுகளில் ஆர்வமாகி, வெளித் தோற்றம் நன்றாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து வாங்குபவர்களே அதிகம்.

இதை தெரிந்துவைத்துக்கொண்டு, ஒரு சிலர் ஸ்மார்ட்போன்களில் ஏமா ற்று வேலைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். இன்று எல்லாவற்றிலும் கலப்படம், போலி என வந்துவிட்டநிலையில் தொழில் நுட்பச்சந்தையில் போலி ஸ்மார்ட்போன்களையும் கயவர்கள் களமிறக்கியிருக் கிறார்கள்.

போலி ஸ்மார்ட்போன்களை ஒரு சில ஃப்யூச்சர்க ளை வைத்து எளிதாக கண்டு பிடித்துவிட முடியும். அவை என்னென்ன என்பதை இனி இங்கே பார்க்க லாம்.

ஐ.எம்.இ.ஐ. கவனிக்க!

இந்தியாவில் வெளியாகும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் (சாதாரண மொபைல் போன்களிலும் இந்த எண் இருக்கும்) பிரத்யேக அடையாள எண்ணாக கருதப்படும் ஐ. எம்.இ.ஐ. எண் (IMEI) கட்டாயம் இருக்கும். இந்த எண்ணானது ஸ்மாட்போனின் உள்புறம் மற்றும் ஸ்மார்ட்போன் பேக்கிங் க் பாக்ஸின் வெளிப்புறம் அச்சிடப்பட்டிருக்கும். இந்த எண் இல்லை என்றால் அவை நிச்சயமாக போலி ஸ்மார்ட்போன்களே. அதனால் இந்த ஐ.எம்.இ.ஐ நம்பர் இல்லாத ஸ்மார்ட்போன்களை ஒரு போதும் வாங்க வேண்டாம்.

பிரபலமான கடை; நம்பகத்தன்மையுள்ள வலைதளம்!

ஸ்மார்ட்போன்களை வாங்கவேண்டும் என ஆசைப்படுபவர், பிராண்டட் வகை ஸ்மார்ட்பொன்களையே பரிசீலனை செய்யு ங்கள். அதுவும் பிரபல ஸ்மார்ட்போன் கடைகள், ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நம்பகத் தன்மை யுள்ள வர்த்தக வலைதளங்களில் மட்டுமே ஸ்மார்ட் போன்களை வாங்குங்கள்.

முன்பின் தெரியாத கடைகளில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. காரணம், அங்கே போலி ஸ்மார்ட்போன்கள் விற்கப்படலாம்.

வடிவமைப்பும், டிஸ்ப்ளேயும்!

போலி ஸ்மார்ட்போன்களாக இருந்தால் அதன் வடிவமைப்பு ஒழுங்காக இருக்காது. அதேபோல ஒரிஜினல் ஸ்மார்ட்போன்களின் திரைக்கும் (டிஸ்ப்ளே),போலி ஸ்மார்ட்போன்களின் திரைக் கும் அதிக வித்யாசங்க ள் இருக்கும்.

போலி ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே தெளிவாக இருக்காது, தரம் குறை ந்ததாக இருக்கும். இதை வைத்து போலி ஸ்மார்ட் போன்களை எளிதாக I இனம் கண்டுகொள்ளலாம்.

இரைச்சலான ஒலி!

போலி ஸ்மார்ட்போன்களாக இருந்தால், சீன மொபைல்கள் போல பாடல் சத்தங்கள் மற்றும் ரிங்க்டோன் ஆகியவற்றை இரைச்சலுடன்கொடுக்கும். இதனால் ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது அதிலு ள்ள ரிங்டோன்களை ஒலிக்க விட்டு பரிசோதித்து வாங் கவும்.

அதே போல ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது பல செயலிகளை ஒரே நேரத்தில் இயக்கிப்பாருங்கள் போலி ஸ்மார்ட்போனாக இருந்தால் நிச்சயம் ஹேங் ஆகும். அப்போதே அந்த போனை வாங்காமல் தவிர்த்து விடலாம்.

கேமரா மற்றும் பேட்டரியை பார்க்க!

கேமராக்களின் தரத்தை வைத்தும் ஸ்மார்ட்போன் களின் விலை வித்தி யாசப்படுகிறது. ஆனால் போலி ஸ்மார்ட்களில் அதிக மெகாபிக்ஸல் அளவுக்கு கேமராவின் தன்மை வழங்கப்பட்டிருந்தாலும் அது 2 மெகபிக்ஸல் அளவு தரத்திலேயே இருக்கும். இதையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

மேலும், ஸ்மார்ட்போனின் மெமரி அளவை பார் த்தும் போலி ஸ்மார்ட் போன்களை கண்டுபிடித்துவிடலாம்.

ஸ்மார்ட்போனின் இதயமாக இருப்பது பேட்டரி தான். அதனால் ஸ்மார்ட்போன் வாங்கும்போது பேட்டரியின் தன்மையையும் கவனிப்பது அவசியம். போலி ஸ்மார்ட்போன்களாக இருந்தால், அதில் நிச்சயமாக சீன மொபைல்களின் பேட்டரிகளே பொருத் தப்பட்டிருக்கும்.

இனி கவனித்து ஸ்மார்ட்போன்களை வாங்குங்கள்!

Read more »

Friday, July 3, 2015

 இலவச வைஃபை… ஜாக்கிரதை!


பொது இடங்களில் இலவச வைஃபை… தகவல்கள் ஜாக்கிரதை!

இன்றைய நிலையில் முக்கியமான ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகள் என அனைத்து இடங்களிலும் இலவசமாக வைஃபை இணைய வசதியானது கிடைக்கிறது. இணையப் பயன்பாடு அதிகமுள்ள இந்தக் காலகட்டத்தி இலவச வைஃபை கிடைப்பது நல்லவிஷயம்தான் என்றாலும், இதை பயன்படுத்துபவர்களின் மெயில் விவரங்கள், வங்கி சார்ந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள்போன்றவற்றை திருடுவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு சம்பவமே இதற்கு சிறந்த உதாரணம்.

இந்த இலவச வைஃபையை பயன்படுத்தும்போது நாம் பிரச்னையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார் இம்பைகர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் அண்ட் சிஸ்டம் பிரிவின் தலைமை மேலாளர் லட்சுமி நரசிம்மன். அவர் கொடுத்த தெளிவான விவரங்கள் இங்கே உங்களுக்காக…

ஆன்டெனாவுக்குள் டெக்னிக்கல் குறைபாடு!

“இன்றைய நிலையில் பொது இடங்களில் உள்ள வைஃபையை பயன்படுத்துகிறவர்கள் பலரின்
செல்போனில் வைத்திருக்கும் முக்கிய பல விஷயங்கள் திருடு போவது வழக்கமான விஷயமாகி விட்டது. வைஃபை ஆன்டெனாவுக்குள் இருக்கும் ஏதேனுமொரு டெக்னிக்கல் குறைபாடுகளைக் கண்டுபிடித்து, அதனுள் எளிதாக ஹேக்கர்கள் உள்நுழைந்துவிடுகிறார்கள். அதன்பிறகு அந்த வைஃபை முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவதால், அதைப் பயன்படுத்துபவர்களின் தகவல்கள் எளிதாகத் திருடப்படுகின்றன.

பொது இடங்களே இலக்கு!

ஹேக்கர்கள் ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற பொது இடங்களில் உள்ள வைஃபைகளைக் குறி வைப்பதற்கான காரணம், அந்த இடங்களில்தான் மக்கள் நடமாட்டமும், செல்வாக்குமிக்கவர்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். தவிர, பொது இடங்களில் உள்ள வைஃபை மேலாண்மை பாதுகாப்பு (அ) பராமரிப்பு குறைவாகவே இருக்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் இந்த இடங்களில் தினமும் பல ஆயிரம் பேர் நடமாடுவதால், இந்தத் திருட்டு வேலைகளை யார் செய்தார்கள், எப்படி செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இதை எல்லாம் நன்றாக தெரிந்து கொண்டுதான் ஹேக்கர்கள் களத்தில் இறங்கி தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொள்கிறார்கள்.

வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் வைஃபை ஆன்டெனாக் களில் உள்ள குறைபாடுகளால் மட்டும்தான் தகவல்களைத் திருடமுடியும் என்பதில்லை. நம்மிடம் இருக்கும் லேப்டாப், ஸ்மார்ட் போன்களை வைத்தும் பொது இடங்களில், அந்த இடம் சார்ந்த பெயர்களிலேயே புதிதாக வைஃபை ஹாட்ஸ்பாட்களை உருவாக்கி பொறி வைப்பதன் மூலம் அதில் விழும் நூற்றுக்கணக் கானவர்களின் தகவல்களைத் திருட முடியும்.

செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை!

கூடுமானவரை பொது இடங்களில் இலவச வைஃபைகளைப் பயன்படுத்து வதைத் தவிருங்கள். இலவச வைஃபைக்கு ஆசைப்பட்டு, மதிப்புமிக்க தகவல்களை இழக்காதீர்கள்.

பொது இடங்களில் உள்ள இலவச வைஃபைகளை பயன்படுத்தி ஃபைனான்ஷியல் செயல்பாடுகள், அதாவது ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்குப் பணப் பரிமாற்றம் செய்வது, ரயில்/விமான நிலையங்களுக்குள் அமர்ந்துகொண்டு பயண டிக்கெட்டுகளை நெட்பேங்கிங் சேவையைப் பயன்படுத்தி முன்பதிவு செய்வது போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த வசதியைப் பயன்படுத்த நேர்ந்தால், இணைய வசதி தேவைப்படும் நேரத்துக்கு மட்டுமே தங்களின் லேப்டாப் மற்றும் இதர கேட்ஜெட்டுகளை வைஃபை மூலம் இணைத்துக் கொள்ளுங்கள். தேவை முடிந்ததும் வைஃபை-ஐ உடனே துண்டித்துவிடுவது நல்லது.

இலவச வைஃபையில் https என்கிற புரோட்டோகால் (Protocol) கொண்ட வலைதளங் களை மட்டுமே பயன்படுத்துங்கள். வங்கிகள் சார்ந்த இணைய தளங்கள், ஜிமெயில், யாஹூ போன்ற மெயில்கள் https கொண்டதாகத்தான் இருக்கும். ஆனால், எல்லா வலைதளங்களும் பாதுகாப்பு அதிகமுள்ள இந்த வகை புரோட்டோகால் அல்லாமல் http என்ற புரோட்டோகால் கொண்டதாக இருக்கும். இந்த வகை புரோட்டோகால்களில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதால், இந்த போர்ட்டல் மூலமாக இயங்கும் வலைதளங்களை இலவச வைஃபைகளைப் பயன்படுத்தும் போது தவிர்த்து விடுங்கள்.

இலவச வைஃபை வசதியை பொழுதுபோக்குவதற்காக, இணையம் வழியாக வீடியோக்களைப் பார்ப்பது, செய்திகளைப் படிப்பது, பாடல்களைக் கேட்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் கள். இலவசமாக வைஃபை கிடைக்கும்போது பயன்படுத்தி னால் என்ன தப்பு என்று நினைப்பதே இவர்களின் மனநிலையாக இருக்கிறது. ஆனால், அது நம்பகத்தன்மை உடையதா என்பதைப் பார்ப்பது இல்லை. இந்த மனநிலை எல்லாத் தரப்பு மக்களிடமும் இருக்கிறது.

இதுபோன்று பொது இடங்களில் உள்ள போலியான அல்லது பாதுகாப்பு குறைந்த இலவச வைஃபை இணையத் துடன் கேட்ஜெட்டுகள் தொடர்ந்து இணைந்திருப்பின் முக்கியமான, முக்கியமில்லாத அனைத்து விஷயங்களும் களவாடப்படும்.

வெகுதூர பயணத்துக்குத் தயாராகிறீர்கள் என்றால், அந்தப் பயணத்துக்குத் தேவையான உடைமைக
ளை எடுத்துவைத்துக் கொள்வதுபோல, பாக்கெட் இன்டர்நெட் வசதியையும் கேட்ஜெட்டுகளுக்கு போட்டு வைத்துக்கொள்ள மறக்க வேண்டாம்.

அலுவலக வேலையாக அல்லது சொந்த வேலையாக ஓரிரு வாரங்கள் வெளியூரில், வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கும் சூழ்நிலை உருவானால், அங்கு கிடைக்கும் வைஃபை குறித்த பாதுகாப்பை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற சூழலில் அங்குள்ள வைஃபை இணையத்தைப் பயன்படுத்தும் போது VPN VIRTUAL PRIVATE NETWORK) என்கிற பாதுகாப்பான டெக்னாலஜி மூலமாகவே பயன்படுத்துங்கள். இப்படி செய்யும்போது யாராலும் தகவல்களை அவ்வளவு எளிதாகத் திருடிவிட முடியாது.

இப்போது ஜிமெயில் முதற்கொண்டு நெட்பேங்கிங் வரை OTP (One Time Password) சேவை இருப்பதால், இந்தச் சேவையை உங்களது செயல்பாடு களுக்காக உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்டு, வலைதளங்களில் பதியப் படுவதால் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

இன்றைய நிலையில் ஒவ்வொரு நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அப்ளிகேஷன்களை வழங்க ஆரம்பித்திருக்கின்றன. அதனால் வலைதளங்களைப் பயன் படுத்தாமல், இலவச வைஃபைகளைப் பயன்படுத்தி ஆப்ஸ்களை இயக்கும்போது, ஆப்ஸ் போலி இல்லாமல் பாதுகாப்பானதாக இருக்கும் பட்சத்தில் தகவல்கள் திருடு போக வாய்ப்புகள் குறைவே. காரணம், அந்த ஆப்ஸ் மீதான பாதுகாப்புக்கு அந்தந்த நிறுவனங்கள் அதிக அக்கறையைச் செலுத்தும்.

Intrusion Detection System (IDS) சாஃப்ட்வேர்களை லேப் டாப்பிலும், Intruder Detection அப்ளிகேஷன்களை ஸ்மார்ட் போன்களிலும் வைத்திருப்பது அவசியமாகும். இந்த சாஃப்ட்வேர் மற்றும் அப்ளி கேஷன்கள் பொது இடங்களில் புதிதாக ஒரு வைஃபை ஹாட்ஸ்பாட் கேட்ஜெட்டுகளை ஸ்கேன் செய்ய நினைத்தால், அதை உடனே நமக்கு குறுஞ் செய்திகளாக அனுப்பும் வேலைகளைச் செய்கின்றன.

எனவே, பொது இடங்களில் வைஃபை வசதியை எச்சரிக்கையாக கையாளுங்கள்!

Read more »